புதுக்கோட்டை: கோயில் வளாகத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே கோயில் வளாகத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அதிகாரிகள் வருவாய் அலுவலகம் கட்டுவதற்கு முயற்சித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் எதர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில், உள்ள கோவில் சுவற்றை இடித்து அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர் அலுவத்தை கட்டும் பணியில் ஈடுபட்டனர். இனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கட்டடப் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day