புதுக்கோட்டை: நகராட்சி மரக்கழிவுக் கிடங்கில் திடீர் தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை சண்முக நகர் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான மரக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. அந்த மரக்கழிவுக் கிடங்கில் நேற்று மாலை சிறிய அளவில் தீப்பற்றி, பின்னர் காற்றின் வேகத்தால் மளமளவென பரவிக் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் மரக்கழிவுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இதனிடையே புகை மூட்டத்தால் சண்முகா நகர் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். 

Night
Day