புதுக்கோட்டை: மயானத்தில் தண்ணீரிலே இறந்தவர் உடலை புதைத்து சென்ற அவலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் காரக்கோட்டை பகுதியில் மயான இடம் சரியில்லாததால் இறந்தவர் உடலை தண்ணீரோடு புதைக்கும் அவல நிலை ஏற்பட்டது. காரக்கோட்டையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த ருக்மணி என்பவர், வயது முதிர்வால் மரணம் அடைந்தார். இப்பகுதியில் மயானம் உள்ள இடத்தில் ஒரு அடிக்கு குழி வெட்டினாலே தண்ணீர் வருகிறது. இதனால் தண்ணீரிலேயே இறந்தவரின் உடலை உறவினர்கள் புதைத்து சென்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தினர் மயான இடத்தை ஆய்வு செய்து மயான கொட்டகை அமைத்து, பள்ளமான இடத்தை மேடாக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day