புதுக்கோட்டை: முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 800-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கின. சீறிப்பாயும் காளைகளை அடக்க 250 காளையர்கள் சுற்று முறையில் களமிறங்கினர். இதில், வெற்றி பெறும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Night
Day