எழுத்தின் அளவு: அ+ அ- அ
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் வழங்கினர்.
அஇஅஇதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆணையின் பேரில் ஆர்.கே பேட்டை ஒன்றியத்திற்குப்பட்ட எஸ்.வி.ஜி புரம் பகுதியில் கழக பிரமுகர் முகுந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முன்னாள் அரசு தலைமை கொறடாவும், முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.எம். நரசிம்மன் இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சரிபேட்டை, தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் எல்.ரஜினி, வழக்கறிஞர் இ.எம்.எஸ். நடராஜன் தனசாமி, பி.கே. பாண்டியன், எம். ஏ. தயாளன், எம்.ஜி. நரசிம்மன், எஸ்.ஆர். பொன்னுரங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.