புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா - அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அரசு தலைமை கொறடாவான பி.எம்.நரசிம்மன் வழங்கினார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அரசு தலைமை கொறடா தலைமையில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதற்கு, முன்னதாக புரட்சித்தலைவி அம்மாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், எல்லாபுரம். எல்.ரஜினி, வழக்கறிஞர் இ.எம்.எஸ்.நடராஜன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

varient
Night
Day