புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் 77-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் உள்ள P.M.T  கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Roll Visual
புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மதுரையில் உள்ள, ஹோட்டலில் இருந்து, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புறப்பட்ட போது, அங்கு திரண்டிருந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திரளான கழகத் தொண்டர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, பொன்னாடைகள், புத்தகங்கள் மற்றும் பூங்கொத்துக்கள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

'புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க' என கழகத் தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி, சின்னம்மாவை வரவேற்றனர். 


உசிலம்பட்டி செல்லும் வழியில் குழந்தைகளைப் பார்த்த புரட்சித்தாய் சின்னம்மா அவர்களுக்கு தாயுள்ளத்துடன் சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார்.

மதுரையில் இருந்து, உசிலம்பட்டி செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, மதுரை காளவாசல் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மேள, தாளங்கள் மற்றும் பல்வேறு இசைக்கருவிகள் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு திரளான பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

உசிலம்பட்டி செல்லும் வழியில் கோச்சடை பகுதியில் இஸ்லாமிய பெண்கள் குடும்பத்துடன் வந்து புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்தனர். அவர்களுடன் சின்னம்மா மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். சின்னம்மாவுடன்,  இஸ்லாமிய பெண்கள் ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வழியில், நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரளான பெண்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர்.

சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள், புரட்சித் தாய் சின்னமாவை பார்த்ததும் உற்சாகமடைந்தனர். மாணவிகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்கள் வழங்கி, மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

செக்கானூரணி செல்லும் வழியில் ஒரு தாய், தனது குழந்தையுடன் வந்து புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து தனது குழந்தை படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை கனிவோடு கேட்டுக் கொண்ட சின்னம்மா உரிய உதவி செய்வதாக தெரிவித்தார்.

செக்கானூரணி செல்லும் வழியில் ஆட்டோ தொழிலாளர்கள் சின்னம்மாவுக்கு எலுமிச்சை பழம் வழங்கி, அஇஅதிமுகவை ஒன்றிணைத்து வரும் 2026ல் சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

செக்கானூரணி பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்தும் மலர்கள் தூவியும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
அஇஅதிமுக என்றால் பெண்கள் படைதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பெண்கள், புரட்சித் தாய் சின்னம்மாவை எழுச்சி பொங்க வரவேற்றனர். 

செக்கானூரணியில். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

கருமாத்தூர் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 'சின்னம்மா வாழ்க' என வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர். கழகத் தொண்டர்கள் சின்னம்மாவுக்கு மாலைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்தில் புரட்சித்தாய் சின்னம்மா கையொப்பமிட்டு வழங்கினார். கழகத் தொண்டர்களும் பெண்களும் சின்னம்மாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 

செல்லம்பட்டி பகுதிக்கு வந்த சின்னம்மாவுக்கு ஏராளமான பெண்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

வாலாந்தூர் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பெண்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, உசிலம்பட்டியில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார் புரட்சித்தாய் சின்னம்மா. செண்டை மேளங்கள் முழங்க புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



 

varient
Night
Day