புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு படப்பை பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா காஞ்சிபுரத்திலிருந்து சென்னை திரும்பியபோது, படப்பை பகுதியில் கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அவரது நினைவு இல்லத்தில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை திரும்பியபோது, வாலாஜாபாத் அருகே உள்ள படப்பை பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். பட்டாசுகள் வெடித்தும், ஆளுயுர மாலை அணிவித்தும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Night
Day