புரட்சித்தாய் சின்னம்மாவுடன் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய்  சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
 
புரட்சித்தலைவி அம்மா பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மதுரையில் தங்கியிருந்தார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆப்பநாடு மறவர் சங்கத்தின்   தலைவர் டாக்டர் ராம்குமார், செயலாளர் குணசேகர பாண்டியன், உயர் மட்டக் குழு நிர்வாகிகள் ஏனாதி மோ.தியாகராஜன் மற்றும் காசி தேவர் உள்ளிட்ட நிர்வாகிகள், கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


varient
Night
Day