புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் : தொண்டர்கள் அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து கழக நிர்வாகிகள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமை தாங்கி அனைவரையும் ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்த வேண்டுமென தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கழக தொண்டர்களே, இன்னும் துரோகிகளை நம்பி இருக்காதீர்கள், சின்னம்மாவை நாடி வாருங்கள், வாருங்கள் என சென்னையில் பிராட்வே, பீச் ஸ்டேஷன், ராயபுரம், ஆர்.கே.நகர், போயஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில், கழக தொண்டர்களே அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திருவொற்றியூர் 14வது வட்ட கழக செயலாளர் D. செபஸ்டின் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டி கழக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

மேலும் புரட்சித்தாய் சின்னம்மா தலைமை ஏற்க வேண்டி கழகத் தொண்டர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் காண்போரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

Night
Day