புரட்சித்தாய் சின்னம்மா தலைமை தாங்கி அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வழிநடத்த வேண்டும்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து கழக நிர்வாகிகள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 

திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளான இந்திரா காந்தி பேருந்து நிலையம், காந்தி சிலை, மயிலம் ரோடு போன்ற பகுதிகளில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்றும் குறிப்பிட்டு தொண்டர்கள் திண்டிவனம் நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

மேலும் புரட்சித்தாய் சின்னம்மா தலைமை தாங்கி அனைவரையும் ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்த வேண்டுமென தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றவும் வழிநடத்தவும் புரட்சித்தாய் சின்னம்மா முன்வருமாறு தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் புரட்சித்தாய் சின்னம்மா தலைமை ஏற்க வேண்டி கழகத் தொண்டர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் காண்போரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

Night
Day