எழுத்தின் அளவு: அ+ அ- அ
மாண்புமிகு அம்மாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய தையல் இயந்திரம், மாணவிக்கு மிதிவண்டி, எண்ணெய் செக்கு இயந்திரம், கோழி வளர்ப்பு இயந்திர பெட்டகம், மருந்து அடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவி பொருட்கள் வீடு தேடிசென்று பயனாளிகளிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட பயனாளிகள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி உசிலம்பட்டி PMT கல்லூரி எதிரேயுள்ள திடலில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு ஏழை எளிய மக்கள், மாணவ மாணவிகள், மகளிர் குழுவினர், விவசாயிகள், மாற்றுதிறனாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் மடிக்கணினி, மிதிவண்டி, தையல் இயந்திரம், மருந்து தெளிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு இயந்திரம், ஆடு கோழி வளர்ப்பு உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புரட்சித்தாய் சின்னம்மாவிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று நலத்திட்ட உதவிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
அந்த வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கல்கொண்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயிக்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் நேரில் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாப்பாபட்டியை சேர்ந்த மகளிர் குழுவிற்கு புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய இங்கு பெட்டர், கோழி குஞ்சுகள், கோழி வளர்ப்பு உணவுக்கான பெட்டி, கோழி குஞ்சுகளுக்கான கூண்டு உள்ளிட்ட கோழி வளர்ப்பு பெட்டகம் ஒப்படைக்கப்பட்டன.
இதேபோல், மதுரை உசிலம்பட்டி பாப்பாபட்டி மற்றும் குப்பனம்பட்டியை சேர்ந்த பயனாளிகளிடம் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய தையல் இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட பயனாளிகள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி செல்லம்பட்டி ஒன்றியம் பானமூப்பன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியபட்டி, அய்யனார்குளத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய தையல் இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அய்யனார்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய மிதிவண்டி ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, பாப்பாபட்டி ஒச்சான்டம்மன் மகளிர் மேம்பாட்டு குழுவினரிடம் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய கரும்பு ஜூஸ் தயாரிப்பு இயந்திரம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒச்சாண்டம்மன் இளைஞர் மேம்பாட்டு குழு இளைஞர்களிடம் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய எண்ணெய் செக்கு இயந்திரம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட பயனாளிகள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து மதுரை உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட போடுவார்பட்டி ஊராட்சி மின்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்க பெருமாள் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய இங்கு பெட்டர், கோழி குஞ்சுகள், கோழி வளர்ப்பு உணவுக்கான பெட்டி, கோழி குஞ்சுகளுக்கான கூண்டு உள்ளிட்ட கோழி வளர்ப்பு பெட்டகம் நேரில் ஒப்படைக்கப்பட்டன.
நலத்திட்ட உதவியை பெற்றுக் கொண்ட பெண் விவசாயி, பள்ளி மாணவி, மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர் குழுவினர் தங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் சிறப்படைய உதவி செய்து வரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். எப்போதும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நன்றியோடும், ஆதரவாகவும் இருப்போம் என தெரிவித்த பொதுமக்கள், மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை புரட்சித்தாய் சின்னம்மா உருவாக்குவார் என்றும் தெரிவித்தனர்.