பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா படகுகள் இயக்கம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்‍குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சென்று சுற்றுலா பயணிகள்  பார்த்து வர வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுகின்றன. தினசரி காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று மீண்டும் கடல் உள்வாங்கி காணப்படுவதுடன் மழை காரணமாக சுற்றுலா படகுகள் இயக்கம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலில் இயல்புநிலை திரும்பிய பின் மீண்டும் இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Night
Day