பூலித்தேவன் நினைவு மாளிகையை பார்வையிட்ட புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

நெற்கட்டும்செவல் பகுதியில் உள்ள மாமன்னர் பூலித்தேவர் நினைவிடத்திற்கு சின்னம்மா வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து மாமன்னர் பூலித்தேவர் நினைவு மாளிகையை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டார்.  மாமன்னர் பூலித்தேவரின் வாழ்க்கை வரலாறு கல்வெட்டுகளையும், பூலித் தேவர் கவுண் பயிற்சி பெறுதல், ஆங்கிலேயர்கள் சரண் அடைதல், நெற்கட்டும்செவலில் கோட்டை கட்டுதல், ராபர்ட் கிளைவ் எதிர்த்து போர் நடத்துவது,  பூலித்தேவர் கோட்டைக்கு செல்லும் காட்சி உள்ளிட்ட அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியன இந்த மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன அவற்றை புரட்சித்தாய் சின்னம்மா  பார்வையிட்டார்.


இதனைத் தொடர்ந்து மாமன்னர் பூலித்தேவர் மணிமண்டபத்தில் புரட்சித்தாய் சின்னம்மா சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அங்கு, பூலித்தேவர் திருவுருவப்படத்திற்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இதனை தொடர்ந்து வருகைப் பதிவேட்டில் புரட்சித்தாய் சின்னம்மா கையெழுத்திட்டார்


Night
Day