பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களால் குவிந்த டன் கணக்கிலான பிளாஸ்டிக் குப்பை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விடுமுறை காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் டன் கணக்கில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காணும் பொங்கலான நேற்று பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகளை கடற்கரையிலேயே விட்டுச் சென்றதால் டன் கணக்கிலான குப்பைகள் கடற்கரையில் குவிந்துள்ளது. கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணிகளில் குறைந்த அளவிலான தூய்மை பணியாளர்களே ஈடுபடுவதால் தற்போது வரை குப்பைகள் அகற்றப்படாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day