பெட்ரோல் விலை குறித்து உலறிக்கொட்டிய பொன்முடி : ரூ.350ல் இருந்து ரூ.750 வரை விலை உயர்ந்ததாக பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொன்முடி, பெட்ரோல் விலை 350 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை உயர்ந்ததாக உலறிக்கொட்டியது  பொதுமக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. முசிறியில் திமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்படி பெட்ரோல் விலை குறித்து பேசிய பொன்முடி லிட்டர் 350 ரூபாயில் இருந்து 750 ரூபாய் வரை உயர்ந்து விட்டதாக பேசினார். பொன்முடியின் உலறல் பேச்சு கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Night
Day