பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் புதிய திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் 24 மணி நேர சேவையாகும்.  மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த உதவி எண் முதல் கட்டமாக BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Night
Day