பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 

கட்ராபாளையம் பகுதியில் விசாகா என்ற பெயரில் இயங்கி வந்த பெண்கள் தங்கும் விடுதியில் கடந்த 12ம் தேதி குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விடுதியில் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பாவை போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த விடுதி மேலாளர் புஷ்பா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 

Night
Day