பெரம்பலூர்: கல்குவாரியை அகற்ற வேண்டி எறையூர் மக்கள் ஆட்சியரிடம் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூரில் கல்குவாரியை அகற்ற வேண்டும் அல்லது குடியிருப்பு வாசிகளுக்கு வேறு இடத்தில் வீடுகட்டி தர வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் எறையூர் மக்கள் மனு அளித்தனர். எறையூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் அதிகப்படியான கிரசர் மற்றும் குவாரி இயங்கி வருகிறது. இதனால் கிரசரில் இருந்து வெளிவரும் மண் துகள்கள் மற்றும் புழுதி காற்றால் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் காற்று மாசுபாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே தங்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டி தர வேண்டும் அல்லது கல்குவாரியை நிறுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார். 

Night
Day