பெரியகுளம் நகராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெரியகுளம் நகராட்சியின் மாதாந்திர நகர்மன்ற கூட்டம், நகர் மன்ற தலைவர் சுமிதா தலைமையில் துவங்கியது. அப்போது அங்கு வந்த 14வது வார்டு பொதுமக்கள் சிலர் தங்களது வார்டு உறுப்பினர் சுதா நாகலிங்கம், அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என குற்றம்சாட்டி, வேறொரு நகர் மன்ற உறுப்பினரை மேற்பார்வைக்கு அனுப்பபுமாறு புகார் தெரிவித்தனர். பின்னர் நகர் மன்ற தலைவர் சுமிதா இருக்கையை முற்றுகையிட்ட அவர்கள், 14வது வார்டு உறுப்பினர் சுதா நாகலிங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

Night
Day