பெருச்சாளியை விழுங்கிய பாம்பு மீன்பிடி வலையில் சிக்கியது !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெருச்சாளியை விழுங்கி விட்டு மீன்பிடி வலையில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த 6 அடி நீள நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தார். திருநகரி மாரியம்மன் கோவில் தெருவில் பாபு என்பவர் வீட்டில் நாகப்பாம்பு ஒன்று பெருச்சாளியை விழுங்கி அங்கிருந்த மீன்பிடி வலையில் சிக்கித் தவித்தது. இதுகுறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான பாண்டியனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அவர் நீண்ட நேரம் போராடி நாக பாம்பை மீட்டு தரையில் விட்டதும் பெருச்சாளியை கஷ்டப்பட்டு வெளியே கக்கியது. 

Night
Day