பொதுத்தேர்வு அறையில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களின் பதற்றத்தை குறைக்க தேர்வறையிலேயே ஹால் டிக்கெட் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஹால் டிக்கெட்டை மறந்துவிட்டு வந்து பதற்றம் அடைய கூடாது என்பதால், புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, தேர்வு எழுதும் அறையிலேயே மாணவர்களுக்கு ஹால் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பிரச்னையில் இருந்து விடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day