பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். 


திருச்சி மாவட்டம், புத்தூரைச் சேர்ந்த சீனிரியாஸ் என்பவர் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு பைக் சாகசத்தில் ஈடுபட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலான நிலையில், சீனிரியாஸை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது யாரும் பைக் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். 

Night
Day