பொது இடங்களில் யுஎஸ்பி மூலம் செல்போன் சார்ஜ் போடுவதை தவிர்க்க சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொது இடங்களில் யுஎஸ்பிகள் மூலம் செல்போன் சார்ஜ் போடுவதை தவிர்க்க சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள் உட்பட பல்வேறு பொது இடங்களில் யுஎஸ்பி போர்ட் மூலம் செல்போன் சார்ஜ் போடும் நபர்கள் மிக கவனமாகவும், எச்சரிக்கையாக இருக்கும் படியும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். USB போர்ட் மூலம் தங்கள் தரவுகளை திருடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுபோன்ற அனுபவங்கள் யாருக்கேனும் இருந்தால் உடனடியாக புகாரளிக்க 1930 என்ற எண்ணை அழைக்குமாறு போலீசார் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Night
Day