மகனுக்‍காக பிரச்சாரம் செய்ய வந்த ப. சிதம்பரம் மக்‍களின் எதிர்ப்பால் ​திரும்பி சென்றார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காரைக்குடியில், கிராம மக்‍கள் பொங்கி எழுந்ததால், வேறு வழியின்றி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தனது பிரச்சாரத்தை பாதியில் முடித்துக்‍கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மித்ராவயல் கிராமத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் தனது மகனுமான கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்குகள் சேகரிக்க முன்னாள் மத்திய நிதியமைச்சரான சிதம்பரம் சென்றார். 
திமுக கூட்டணியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை என சுட்டிக்‍காட்டினர். தொகுதிக்கு எதுவும் செய்யாத நீங்கள் எதற்கு வாக்கு சேகரிக்க வருகிறீர்கள்? என கேள்விஎழுப்பினர். கற்களை வீசி எறிவோம் என ஆவேசமாக கூறியதால் அதிர்ச்சியடைந்த சிதம்பரம், தனது பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பி சென்றார். 

Night
Day