மக்களவை தேர்தல் - நாளை மூடப்படும் பேரிஜம் சுற்றுலா பகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதி நாளை மூடப்படுவதுடன் மற்ற சுற்றுலா இடங்கள் நண்பகலுக்கு மேல் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.  நூறு சதவீத வாக்குப்பதிவை செலுத்த வேண்டி தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா இடங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் சுற்றுலா பகுதி நாளை முழுவதுமாக மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் ஃபாரஸ்ட், குணா குகைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நண்பகல் 12 மணிக்கு மேல் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. 

Night
Day