மக்கள் தேசம் கட்சி பிரமுகர் வெட்டி கொலை வழக்கு : 5 பேர் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்கள் தேசம் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் ஆம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் விவேகானந்தன் கடந்த 31-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளிகைள கைது செய்யக்கோரி விவேகானந்தனின் உறவினர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக எசையனூரை சேர்ந்த பாமக இளைஞரணி செயலாளர் கோபி, ராஜேஷ், தாமோதரன், சந்துரு மற்றும் சூர்யா ஆகிய 5 பேர் ஆம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Night
Day