மதுபான விற்பனையில் லாபம் பார்க்கும் அரசு மீது மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மதுபானங்களின் தொடர் விலை உயர்வு தங்களை பாதிப்படைய செய்துள்ளதாக மதுபிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மதுபானங்களுக்கான விலை ஏற்றம் இன்றுமுதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் செயல்படும் மதுக்கடையில், உயர்த்தப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பதாக கூறி கடை ஊழியர்களுடன் மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுபானங்களில் விலை ஏற்றி லாபம் பார்க்கும் அரசு, ஊழியர்களின் சம்பளத்தை ஏன் ஏற்றுவதில்லை எனவும், மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்தி மக்களை வஞ்சிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Night
Day