மதுரையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி பொன்மலைப்பட்டி ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

காலாண்டு விடுமுறையின்போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார். இதனிடையே ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் கடந்த 27 ஆம் தேதி நிறைவடைந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அமைச்சரின் தொகுதியிலேயே உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

Night
Day