மதுரை : வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு - பெற்றோர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் பெற்றோரை போலீசார் கைது செய்தனர். கோசாகுளத்தை சேர்ந்த 11 வயது சிறுமி தாயை இழந்த நிலையில், தந்தையும் வேறொரு திருமணம் செய்து கொண்டதால் உறவினர்களுடன் வளர்ந்து வந்துள்ளார். இவரது அண்ணனும் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில், பெரியப்பா செந்தில்குமார், அவரது மனைவி சந்திரபாண்டி பரமாரிப்பில் வளர்ந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கழிவறைக்குள் சென்ற சிறுமி கதவை திறக்கவில்லை எனக்கூறி, வளர்ப்பு பெற்றோர் கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமி உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், செந்தில்குமாரே வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதும், இதற்கு சந்திரபாண்டி உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

Night
Day