மதுரை: அடிப்படை வசதிக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே அடிப்படை வசதிக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டியில் உள்ள இருளப்ப தேவர் தெருவில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் முறையாக அகற்றப்படாததால், நோய்தொற்று அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Night
Day