மதுரை: ஏறுதழுவுதல் போட்டியில் அமைச்சர் பெயரில் காளை விடுவித்து முறைகேடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை கீழக்கரை ஏறுதழுவுதல் போட்டியில் முறைகேடு நடைபெற்றதாகக்கூறி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை ஏறுதழுவல் அரங்கத்தில் கடந்த 24ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பெயரில் விடப்பட்ட காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதாகக்கூறி 3வது பரிசு பெற்ற காளை உரிமையாள முடக்காத்தான் மணி விழா மேடையிலேயே மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் ஜல்லிக்கட்டு விழா குழுவினரை கண்டித்து, முடக்காத்தான் மணி பொய்கால் காளையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் திருநங்கைகளும் ஒப்பாரிவைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day