மதுரை: கால்வாயில் குளிக்க சென்ற 8 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே கால்வாயில் குளிக்க சென்ற 8 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த இளமகாதேவன் மகள் யாழிசை, தினசரி பள்ளி முடிந்து வந்ததும் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் குளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது., இந்நிலையில் வழக்கம் போல பள்ளி முடிந்து வந்த யாழிசை, கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் யாழிசை வீடு திரும்பாததை அறிந்த பெற்றோர் கால்வாய் பகுதியில் சென்று பார்த்த போது சிறுமி நீரில் மூழ்கி சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day