மதுரை: மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்வாரிய ஊழியரை தாக்கியதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த மாயி என்பவா் மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறி, வயர்மேன்கள் குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சென்று மின்சாரத்தை துண்டித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாயி மற்றும் அவரது மகன் சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் வயர் மேன் குமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து குமார் உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை கண்டித்து உசிலம்பட்டி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி செய்யாமல் காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.

Night
Day