மதுரை: வீட்டின் கூரைமீது முறிந்து விழுந்த பழமையான மின்கம்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டின் கூரையில் விழுந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் அகற்றாமல் அலட்சியம் காட்டுவதாக அவ்வீட்டில் வசிப்போர் வேதனை தெரிவித்துள்ளனர். குன்னனம்பட்டியைச் சேர்ந்த தங்கமலை என்பவர் வீட்டின் அருகில் இருந்த பழமையான மின்கம்பம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூரைமீது முறிந்து விழுந்து ஓடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சாரம் இன்றியும், வீட்டிற்குள் நுழைய முடியாமலும் தங்கமலை குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகாரளித்தும் கடந்த 4 நாட்களாக மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றாமல் அலட்சியமாக உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தங்கமலை குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day