மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது திமுக அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு தன்னுடைய ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். சென்னை மைசூரு வழித்தடத்தில் 2 வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு பெயர் போனது திமுக அரசு என்றும் மத்திய அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிங்கார சென்னை 2.0 என தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டதாகவும் சாடினார்.

Night
Day