மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் குறித்து வேங்கை வயல் முதல் ஆம்ஸ்ட்ராங் கொலை வரை என 17 சம்பவங்களை பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திடமும் பாஜக சார்பில் முறையிட உள்ளதாக கூறினார். தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை, கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். முன்னதாக கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

Night
Day