எழுத்தின் அளவு: அ+ அ- அ
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், மறைந்த நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி ராஜா நேற்று நீலாங்கரை இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மனோஜ் உடலுக்கு கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, பாண்டியராஜன், பேரரசு, தியாகராஜன், விக்ரமன், எழில் உள்ளிட்ட இயக்குநர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், விஜயகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சரத்குமார், நாசர், கவுண்டமணி, செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ரோபோ சங்கர், பிரேம் குமார், பார்த்திபன், ஸ்நேகன் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் தேவயானி, ராதிகா சரத்குமார், நமீதா, உள்ளிட்ட நடிகைகளும் அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நீலாங்கரை இல்லத்தில் இருந்து மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு தற்போது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற அமரர் ஊர்தியில் தாஜ்மஹால் திரைப்படத்தின் பாடல்கள் இசைக்கப்பட்டன. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.