மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில், யூடியூபர் இர்பான் மருத்துவ குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

யூடியூபர் இர்பான் என்பவர் தான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். பின்னர், குடும்ப நிகழ்ச்சி ஒன்றின்போது அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் இர்பான் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், மருத்துவ குழுவிடம் தொலைபேசி மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

Night
Day