மயிலாடுதுறை சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், காவல்துறை சார்பில் ஹெல்மெட் பேரணி நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி காவிரி நகர், பாலத்தில் இருந்து தொடங்கியது. இப்பேரணியை மயிலாடுதுறை துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Night
Day