மயிலாடுதுறை: ஆயிரம் ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்ட வனத்துறையினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர். அரியவகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள், திருமுல்லைவாசல் முதல் கூழையார் வரையிலான கடற்கரை பகுதிகளில் முட்டைகள் இட்டு செல்கிறது. இந்த முட்டைகளை பொதுமக்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக கூழையார், கொட்டாயமேடு, வானகிரி உள்ளிட்ட 6 இடங்களில் வனத்துறையினர் சார்பில் முட்டை பொறிப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கு பொறிக்கப்பட்ட ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.

Night
Day