மயிலாடுதுறை: தனியார் தார் கலவை தொழிற்சாலைக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் தார் கலவை தொழிற்சாலையை அகற்றக்கோரி சாலைமறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். எடமணல் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் ஜல்லி துகளால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியுள்ளனர். எனவே, ஆலையை அகற்றக்கோரி 5 கிராம மக்கள் எடமணல் கடைவீதியில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சென்ற சீர்காழி போலீசார், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறி, அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Night
Day