மயிலாடுதுறை: மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த கவின், ஜஸ்வந்த், காளிதாஸ் ஆகிய 3 பேர் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ராதாநல்லூர் அருகே வந்த இருசக்கர வாகன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கவின், ஜஸ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காளிதாஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day