மயிலாடுதுறை: வலிப்பு வந்த குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்காத அலட்சியம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில், வலிப்பு நோய் வந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முன்வராததை கண்டித்து பெற்றோரும், உறவினரும் மறியலில் ஈடுபட்டதை அடுத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சேந்தகுடி ரத்தினகுமார் என்பவரின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை 6 மணிக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், குழந்தையை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது 10 மணி வரை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்ககாததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும், உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டதை அடுத்து அங்கு சென்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும், கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

Night
Day