மழையில் நனைந்தபடியே சென்ற பள்ளி மாணவர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வகுப்பறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படமோ என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்த போதிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால் பெற்றோர்களும், மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

varient
Night
Day