மாநிலக் கல்லூரிக்கு வரும் 14-ம் தேதி வரை விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் பொன் பாடியை சேர்ந்த சுந்தர் என்பவர் மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர், சுந்தரிடம் வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த சுந்தர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை கொலை வழக்காக மாற்றிய போலீசார், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து பதற்றமான சூழல் காரணமாக மாநில கல்லூரிக்கு வரும் திங்கட்கிழமை விடுமுறை விடுத்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day