மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு - கொலை வழக்காக மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மாநில கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் பொன் பாடியை சேர்ந்த சுந்தர் என்பவர் மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர், சுந்தரிடம் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த சுந்தர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரிபிரசாத், கமலேஸ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Night
Day