மாயமான செல்லப்பிராணி நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் செல்லப்பிராணியான நாய் காணாமல் போன நிலையில் அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். 
 
கரூர் காந்திகிராமம், பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ் - ஜெயபிரபா தம்பதியினர். இவர்கள், ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி நாய் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தங்களது செல்லப்பிராணியை கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என நாயின் உரிமையாளர் சதீஷ் அறிவித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டரையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Night
Day