மாயமான 3 மீனவர்களில் 2 பேரின் உடல்கள் மீட்பு - மற்றொரு நபரை தேடும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே மீன் பிடிக்க சென்றபோது விசைப்படகு பழுதாகி கடலில் மூழ்கியதால் 2 மீனவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 5 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது விசைப்படகில் பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கியது. இதில், இரண்டு மீனவர்கள் கரைக்கு திரும்பிய நிலையில், மாயமான 3 மீனவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டனர். இதில், மீனவர்கள் ஆரோக்கியம், பரகத்துல்லா ஆகியோரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும், மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று முதல் மீன் பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றுள்ள நிலையில், முதல் நாளிலேயே படகு பழுதானதால் 2 மீனவர்கள் உயிரிழந்துள்ளது சக மீனவ மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day