மின்சாரத்தை கொண்டு செல்ல கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கிய உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்ல கம்பிகள் அமைப்பதற்கு உரிமம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்க உள்ள காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரங்களை கொண்டு செல்வதற்கு கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கி மத்திய மின்சார ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக விவசாய நிலங்களில் மின் கம்பிகள் அமைப்பதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டது. இதனை எதிர்த்து நிலஉரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் டாடா நிறுவனத்துக்கு மின் கம்பிகள் அமைக்க அனுமதியளித்து மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். 

Night
Day